அண்ணாமலையார் கோவிலில் மாவட்ட நீதிபதி சோதனை - பக்தர்கள் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், இரண்டாம் கட்டமாக, மாவட்ட நீதிபதி மகிழேந்தி, ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2018-09-06 17:52 GMT
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், இரண்டாம் கட்டமாக, மாவட்ட நீதிபதி மகிழேந்தி, ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் செல்லும் தரிசனம் வழி, குடிநீர் வசதி, உண்ணாமுலையம்மன் சன்னதி, தங்க தேர் உள்ளிட்டவற்றை சோதனை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாமலையார் கோவிலில், 15 இடைத்தரகர்கள் உள்ளதாகவும், இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்படும் என கூறினார். 
 
Tags:    

மேலும் செய்திகள்