ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தேதி மாற்றப்பட்டதை அறியாமல் ஆஜரான காவல் ஆணையர் ஜார்ஜ்

குறுக்கு விசாரணைக்கான தேதி மாற்றப்பட்டதை அறியாமல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆஜரானார்.

Update: 2018-09-06 10:45 GMT
சசிகலா தரப்பினர் நடத்தும் குறுக்கு விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்தநிலையில் நேற்று தேதி மாற்றப்பட்டதை அடுத்து, அது குறித்து இ-மெயில் மூலம் ஜார்ஜுக்கு தகவல் அளிக்கப்பட்டது, ஆனால் ஜார்ஜ் அதனை கவனிக்காமல் இன்று, விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். இதையடுத்து, தேதி மாற்றப்பட்ட தகவலை ஆணையத்தின் செயலாளர் அவரிடம் விளக்கி மற்றொரு தேதியில் ஆஜராக சம்மன் கொடுப்பதாக தெரிவித்ததை அடுத்து, ஜார்ஜ் திரும்பி சென்றார்.
Tags:    

மேலும் செய்திகள்