திருச்செந்தூர் - தங்க சப்பரத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவில் சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Update: 2018-09-06 02:25 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவில் சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கடந்த 30-ஆம் தேதி தொடங்கிய ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாளான நேற்று மாலை, வள்ளி மற்றும் தெய்வானையுடன் சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளினார்.  தொடர்ந்து வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு சுவாமி காட்சி அளித்தார். இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 


Tags:    

மேலும் செய்திகள்