தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சோபியா யார்?

விமானத்தில், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவி சோபியா, சமூக கருத்துக்களை இணைய தளங்களில் தொடர்ந்து எழுதி வந்திருப்பது தெரியவந்துள்ளது.

Update: 2018-09-04 04:15 GMT
தூத்துக்குடி மாவட்டம் மூன்றாம் மைல் பகுதியைச் சேர்ந்த சாமி - மனோகரி தம்பதியின் மகள் சோபியா, மகன் கிங்ஸ்டன். சாமி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாய் மனோகரி, தலைமை செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கிங்ஸ்டன், தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்,  பள்ளிப் படிப்பை தூத்துக்குடியில் முடித்த சோபியா, ஜெர்மனியில் M.Sc இயற்பியலும், கனடாவில் M.Sc கணிதமும் முடித்து விட்டு, தற்போது அங்குள்ள மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். இணைய தளங்களில் சமூக கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வந்த அவர், சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாகவும்  பல்வேறு கருத்துக்களை பதிவிட்டார். இந்நிலையில், விமானத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையை பார்த்தபோது, பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களை நேரடியாக தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கைதாகியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்