மனைவியின் உடலை, வீட்டு திண்ணையில் வைத்து எரித்த கணவர் வீட்டார்

தர்மபுரி அருகே தற்கொலை செய்து கொண்ட மனைவியின் உடலை, வீட்டு திண்ணையில் வைத்து எரித்த கணவர் வீட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

Update: 2018-09-03 07:58 GMT
பாப்பாரப்பட்டி அடுத்த மாக்கனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பார்த்தசாரதியின் மனைவி வெண்ணிலா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு, வீட்டிற்கு எடுத்து வரப்பட்ட வெண்ணிலாவின் உடலை திண்ணையில் வைத்து கணவர் பார்த்தசாரதி தீ வைத்துள்ளார். 

இதில் 4 வாகனங்கள், வீட்டிலிருந்த உடைமைகள் சேதம் அடைந்தன. பின்னர், பிணத்தை எரித்து வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பார்த்தசாரதியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்