37 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக் கொண்ட முன்னாள் கல்லூரி மாணவர்கள் : திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2018-09-02 05:48 GMT
ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 1978-ஆம் ஆண்டு முதல் 1981-ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் 40 பேர், தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். 37 ஆண்டுகளுக்கு பின்னர் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள், தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.   
Tags:    

மேலும் செய்திகள்