திருமுருகன் காந்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

சென்னையில் தடையை மீறி ஊர்வலம் சென்றதாக கைது செய்யப்பட்ட வழக்கில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2018-09-01 02:21 GMT
சென்னையில் தடையை மீறி ஊர்வலம் சென்றதாக கைது செய்யப்பட்ட வழக்கில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 9ம் தேதி, பெங்களூருவில் கைது செய்யப்பட்ட அவர், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி சுபாதேவி, திருமுருகன் காந்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். எனினும், மேலும் சில வழக்குகள் உள்ளதால், சிறையில் இருந்து அவர் விடுதலையாக முடியாது என தெரிகிறது.
Tags:    

மேலும் செய்திகள்