மாதா கோயில் திருவிழா கொடியேற்றம் - திரளான பொதுமக்கள் பங்கேற்பு...

சென்னை பெசண்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி, இன்று மாலை கொடியேற்றம் நடைபெற்றது.

Update: 2018-08-29 15:55 GMT
சென்னை பெசண்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி, இன்று  மாலை கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற தேர்பவனியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர், அன்னை வேளாங்கண்ணி உருவம் பொறிக்கப்பட்ட  கொடியை, சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி ஏற்றி வைத்தார். தொடர்ந்து 11 நாள் நடைபெறும் திருவிழாவின் 10ம் நாளான செப்டம்பர் 7ம் தேதியன்று தேர்த் திருவிழா நடைபெறுகிறது. பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 


Tags:    

மேலும் செய்திகள்