கமுதியில் 300 பவுன் நகைகளை பறித்து சென்ற 3 பேர் கும்பல்...

கமுதியில், கூட்டுறவு வங்கியில் இருந்து திருமணத்திற்காக நகை எடுத்து திரும்பிய போது 300 சரவன் நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றதாக பெண் ஒருவர் கொடுத்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-08-29 06:41 GMT
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த சினிமா பைனான்சியரான பூபதிராஜா என்பவரின் மகள் திருமணம் இன்று நடைபெறுகிறது. இதற்காக பூபதிராஜாவின் உறவினர் உமா, ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து 300 பவுன் நகைகளை எடுத்து கொண்டு திரும்பியபோது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் தம்மை வழிமறித்து நகைகளை பறித்து சென்றதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில்  சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போலீசார், உமாவிடமும் விசாரணை நடத்தினர். பல்வேறு வங்கிகளில் நகைகள் அடமானம் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும், திடீரென நகைகளை உறவினர் கேட்டதால் கொள்ளை என உமா நாடகம் ஆடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.  
Tags:    

மேலும் செய்திகள்