தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : நேரில் ஆஜராக, இறந்தவருக்கு சம்மன்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்துபோன கிளாஸ்டன் என்பவரை, விசாரணைக்கு ஆஜராகுமாறு, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Update: 2018-08-21 15:35 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்துபோன கிளாஸ்டன் என்பவரை, விசாரணைக்கு ஆஜராகுமாறு, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம்  சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணை ஆணையத்தில், வருகிற 29ம் தேதி காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும், அப்படி வரும்போது உடன் ஒருவரை அழைத்து வருமாறும் இந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்து போன கிளாஸ்டனுக்கு சம்மன் வந்ததை பார்த்த கிளாஸ்டனின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்