கேரள வெள்ளம் எதிரொலி - நாமக்கல்லில் கறிக்கோழிகள் தேக்கம்

கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை வெள்ளத்தால், நாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழிகள் தேக்கமடைந்துள்ளன

Update: 2018-08-20 12:10 GMT
கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை - வெள்ளத்தால், நாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழிகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில், கறிக்கோழி விலை 30 ரூபாய் வரை குறைந்து, கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மழை - வெள்ள பாதிப்பால், கறிக்கோழி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறும் விற்பனையாளர்கள், விலை குறைந்தும், விற்பனை குறைவாகவே உள்ளதாகவும் கூறுகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்