தஞ்சை பெரியகோயிலில் 3 சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் : போலீஸ் விசாரணை

தஞ்சை பெரியகோயிலில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் 3 சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளது.

Update: 2018-08-19 09:11 GMT
கோயிலின் பின்புறத்தில் 3 சந்தன மரங்களை, மர்ம நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதை போன்று கோயிலில் முன்னர் நடைபெற்ற சந்தன மரக் கடத்தலில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இதனால் இந்த கடத்தல் சம்பவத்திற்கும் பழைய குற்றவாளிகளுக்கு சம்பந்தம் இருக்கிறதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்