ஆணவக் கொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - நடிகர் சத்யராஜ்
ஆணவக் கொலை தடுக்க அறிவு சார்ந்த பயம் தேவை என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்
பல்துறை சாதனை பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கி பேசிய நடிகர் சத்யராஜ், ஆணவக்கொலைகள், தமிழகத்தில் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
கிராமப்புறங்களில் வசிக்கும் ஒவ்வொருவரும், அறிவு சார்ந்த பயத்துடன் இருந்தால், ஆணவக் கொலைகளை தடுத்து முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.