உலகம் முழுவதும் ஆன்மிக தேடல் அதிகரித்திருப்பதால், தமிழ் மிக மிக அதிக வேகமாக பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.