சிறந்த பீல்டர் விருது பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர்.. விருதை அறிவித்து வாழ்த்து தெரிவித்த சச்சின்.. ஆரவாரத்துடன் வாழ்த்து கூறிய சக வீரர்கள்

Update: 2023-11-03 16:18 GMT

உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. அதற்கான அறிவிப்பை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட போது, ஸ்ரேயாஸ் ஐயர் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருக்கு மற்ற இந்திய அணி வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர்.



Tags:    

மேலும் செய்திகள்