உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : பாகிஸ்தான் அணி தடுமாற்றம்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தடுமாறி வருகிறது.
இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 57 ரன்களும், ரோகித் சர்மா 140 ரன்களும் எடுத்து அசத்தினர். இதேபோல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராட் கோலி 77 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தடுமாறி வருகிறது. தற்போது வரை பாகிஸ்தன் அணி 35 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.