மகளிர் உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் : அரையிறுதி சுற்றுக்கு இந்தியா தகுதி

மகளிருக்கான உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

Update: 2018-11-16 21:40 GMT
மகளிருக்கான உலகக் கோப்பை 20  ஓவர் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. கயானாவில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மித்தாலி ராஜ் 51 ரன்கள் விளாசினார். இந்த இலக்கை எதிர்கொண்ட அயர்லாந்து அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்