இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் : இங்கிலாந்து 233 ரன்கள் முன்னிலை

இந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி, 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Update: 2018-09-02 05:36 GMT
இங்கிலாந்தின் சவுதாம்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக அந்த அணியின் ஜோஸ் பட்லர் 69 ரன்கள் அடித்தார். சாம் கர்ரென் 37 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி சார்பில் முகமதி சமி 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்