தேர்தல் ஆணையத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை

Update: 2024-04-23 14:42 GMT

இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அரசியலமைப்புச் சட்டத்தின் ஒற்றுமை, மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிராக பிரதமர் மோடியின் பேச்சு அமைந்துள்ளதாக தெரிவித்தார். எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடி மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்