`எனக்கே இந்த நிலைமைனா மத்த பெண்களுக்கு என்ன நிலைமை` பாமகவினரால் கொதித்த வீரப்பன் மகள்.. சேலத்தில் பெரும் பரபரப்பு

Update: 2024-04-20 04:43 GMT

கிருஷ்ணகிரி தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வீரப்பனின் மகள் வித்யா ராணி, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வித்யா ராணி, மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குள்ளமுடையானூர் பகுதியில் வாக்கு செலுத்த காரில் வந்தார். அப்போது வாக்குச்சாவடி அருகே காரில் செல்லக்கூடாது என பாமகவினர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படும் நிலையில், நாம் தமிழர் கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் சமாதானப்படுத்திய நிலையில், போலீசாருடன் வித்யா ராணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்...

Tags:    

மேலும் செய்திகள்