" காங். அச்சப்படுவது ஏன்?" - பிரதமர் மேடையில் வைத்த கேள்வி ?

Update: 2024-04-23 13:28 GMT

மக்களவைத் தேர்தலையொட்டி, ராஜஸ்தான் மாநிலம் டோன்க்கில், நடைபெற்ற பாஜகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, 2014 ம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியே தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால், ஜம்மு கஷ்மீரில் நமது பாதுகாப்பு படையினர் மீது கற்கள் வீசுவது தொடர்ந்திருக்கும் என்று கூறினார். உங்களை சொத்துக்களை பறித்து, சில குறிப்பிட்ட மக்களிடம் வழங்க காங்கிரஸ் கட்சி சதி செய்கிறது என்ற உண்மையை நாட்டு மக்களிடம் தான் அம்பலப்படுத்தி உள்ளதாக தெரிவித்த பிரதமர், இந்த உண்மையைக் கண்டு காங்கிரஸ் கட்சி அச்சப்படுவது ஏன் கேள்வி எழுப்பினார். பாஜக ஆட்சி அமைந்த உடன் உங்கள் நம்பிக்கைகளை கேள்வி கேட்க யாருக்கும் துணிச்சல் இருக்காது என்றும் மோடி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்