சபரிமலையில் இருமுடியுடன் அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம்

Update: 2023-11-21 05:40 GMT

அமைச்சர் சேகர்பாபு, சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருமுடியுடன் 18 ஆம் படி ஏறி சாமி தரிசனம் செய்தார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சபரிமலைக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இருமுடியுடன் 18ஆம் படி ஏறி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, சன்னிதானத்தில் உள்ள மாளிகைபுரத்து அம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்த அமைச்சருக்கு, பூஜிக்கப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது .

Tags:    

மேலும் செய்திகள்