அதிமுக கருவறையில் கலவரம்.. CBCID அலுவலகத்தில் OPS தரப்பு.. திடீர் பரபரப்பு

Update: 2023-12-16 07:22 GMT

அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தங்கள் தரப்பு புகாரை விசாரிக்க வேண்டும் என, எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் புகார் மனு அளித்தனர்.

ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் இந்த புகார் மனுவை அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல் செய்தது ஒபிஎஸ் தரப்பு அல்ல யார் தவறு செய்தாலும் நடவடிக்கைகள் எடுக்கட்டும் என்று கூறினார். அதற்கு தயாராக உள்ளோம் என்ற ஜே.சி.டி.பிரபாகர், உண்மையான விசாரணை நடத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்