புதுச்சேரி மாநில வளர்ச்சி விவகாரம் : "பிரதமரின் வருகை அடித்தளமாக அமையும்" - மத்திய அமைச்சர் தகவல்
காரைக்காலில் பா.ஜ.க. அலுவலகத்தை மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தொடங்கி வைத்தார்
காரைக்காலில் பா.ஜ.க. அலுவலகத்தை மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தொடங்கி வைத்தார். பின்னர் தந்தி டி.வி. செய்தியாளரிடம் பேசிய அமைச்சர், புதுச்சேரியின் வளர்ச்சிக்காக இரண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார் என தெரிவித்தார். இது புதுச்சேரி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என்றும், புதுச்சேரி மாநில மக்கள் வளர்ச்சி அடைவார்கள் என்றும் அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.