இலங்கை கடற்படையினரை கைது செய்க - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் இத்தாலிய வீரர்களை போல சிங்கள கடற்படை வீரர்களையும் கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

Update: 2021-01-23 03:15 GMT
தமிழக மீனவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் இத்தாலிய வீரர்களை போல சிங்கள கடற்படை வீரர்களையும் கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்,. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மீனவர்கள் உயிரிழந்ததற்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் மட்டும் தெரிவித்திருப்பது போதுமானதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்,.மேலும் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு நல்லெண்ண உதவியாக ஒரு கோடி ரூபாயும், இழப்பீடாக தலா 10 கோடி ரூபாயும் இலங்கையிடம் இருந்து மத்திய அரசு பெற்றத்தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்