"வங்கி, ஏடிஎம்களில் பிராந்திய மொழி உபயோகம் நிறுத்தம் இல்லை" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
வங்கிகளில் ஏடிஎம்களில் பிராந்திய மொழி உபயோகிப்பதை தடுத்து நிறுத்துமாறு எந்தவித உத்தரவும் பிறபிக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வங்கிகளில், ஏடிஎம்களில் பிராந்திய மொழி உபயோகிப்பதை தடுத்து நிறுத்துமாறு எந்தவித உத்தரவும் பிறபிக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான டிவிட்டர் பதிவில் அவர் வங்கிகளில், ஏடிஎம்களில் பிராந்திய மொழி பயன்பாட்டை நிறுத்தும் நோக்கமோ அல்லது எண்ணமோ மத்திய அரசுக்கு இல்லை எனவும் , எங்கேனும் இடையூறு ஏற்பட்டால் தகவல் தெரிவிக்கப்பட உடனேயே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிடுள்ளார்.