மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தாயார் காலமானார்
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தாயார் இன்று காலை நெஞ்சுவலியால் அவதிப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தாயார் இன்று காலை நெஞ்சுவலியால் அவதிப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 89. இது குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், ஒரு உயர்ந்த ஆளுமை, வழிகாட்டி மற்றும் தத்துவஞானி, தமது வாழ்க்கையில் யாரும் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டு விட்டாள் என பதிவிட்டுள்ளார்.