"புதுச்சேரி சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை" - நாராயணசாமி தகவல்
புதுச்சேரியில் 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய விரைவில் சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய விரைவில் சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திங்கட்கிழமை முதல் வழிபாட்டு தளங்கள் திறக்கப்பட உள்ளதால் மத்திய அரசின் வழிபாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் கடை பிடிக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.