"வன்முறையை அரசியல் ஆக்க கூடாது" - சோனியா குற்றச்சாட்டிற்கு பிரகாஷ் ஜவடேகர் பதில்

உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் எனும் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் அறிக்கை கண்டிக்கத்தக்கது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

Update: 2020-02-26 11:21 GMT
உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் எனும், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் அறிக்கை கண்டிக்கத்தக்கது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது போன்ற சமயங்களில் அனைத்து கட்சிகளும் அமைதி காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார். இதற்கு மாறாக அரசாங்கத்தை குறை கூறுவது அழுக்கு அரசியல் என்றும், வன்முறையை அரசியலாக்குவது தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்