இந்திய பொருளாதாரம் அதலபாதாளம் செல்கிறது - ஸ்டாலின்

கடன் வாங்கிய பெருமுதலாளிகளை தப்பவிட்டது ஏன் என கேள்வி கேட்பவர்கள் தேச துரோகிகளா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2019-08-27 19:49 GMT
கடன் வாங்கிய பெருமுதலாளிகளை தப்பவிட்டது ஏன் என கேள்வி கேட்பவர்கள் தேச துரோகிகளா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் பொன்விழா மாநாட்டில் பேசிய அவர், தாம் தாய் கழகத்துக்கு வாழ்த்துக்கூற வந்துள்ளதாக கூறினார். இந்த இயக்கம் பலநூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற ஸ்டாலின், திராவிட கழகத்தை யாராலும் அழிக்க முடியாது ​என்றும், திராவிட கழகம் முன்பை விட வேகமாக வளர்ந்து வருவதாகவும் கூறினார். இந்திய பொருளாதாரம் அதலபாதாளத்தில் சென்று கொண்டிருப்பதாக கூறிய ஸ்டாலின், இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே, காஷ்மீர் அந்தஸ்து ரத்து, சிதம்பரம் கைது போன்ற நாடகங்கள் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார். 
Tags:    

மேலும் செய்திகள்