"பாஜகவின் மேல் தீய சக்தியை ஏவி விட்டுள்ளனர்" - பாஜக எம்.பி. ப்ரக்யா தாக்கூர் பரபரப்பு தகவல்

பாஜகவின் மேல் எதிர்க்கட்சிகள் தீய சக்தியை ஏவி விட்டிருப்பதாக பாஜக எம்பி ப்ரக்யா தாக்கூர் தெரிவித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-08-27 04:45 GMT
பாஜகவின் மேல் எதிர்க்கட்சிகள் தீய சக்தியை ஏவி விட்டிருப்பதாக பாஜக எம்பி ப்ரக்யா தாக்கூர் தெரிவித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுக்கு கெட்ட நேரம் வர உள்ளது என்றும், எதிர்க்கட்சிகள் தீய சக்தியை பயன்படுத்துகின்றனர் என்றும் ஒரு முறை எம்.பி. சாக்‌ஷி மகராஜ் தெரிவித்ததாக ப்ரக்யா தாக்கூர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அடுத்தடுத்து பா.ஜ.க. தலைவர்கள் உயிரிழப்பதை பார்க்கும் போது சாக்‌ஷி மகராஜ் குறிப்பிட்டது, மீண்டும் நினைவுக்கு வருவதாக  ப்ரக்யா தாக்கூர் தெரிவித்துள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்