மோடி அலை உள்ளது போல ஒரு மாயத் தோற்றம் ஏற்படுத்த முயற்சி - குமாரசாமி

பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பது போல மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டு வருவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்

Update: 2019-05-20 13:04 GMT
பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாநில கட்சிகளை வளைக்கவே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்ற போர்வையில், பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பது போல மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டு வருவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள குமாரசாமி, தேர்தல் வெற்றிக்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை பாஜக தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் அதனாலேயே,  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எதிர்க்கட்சிகளை  அச்சப்பட வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்