ஆட்சி கவிழ்ந்துவிடும் என கூறி தி.மு.கவினர் ஏமாற்றுகின்றனர் - அமைச்சர் காமராஜ்

ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று கூறி திமுகவினர் பொதுமக்களை ஏமாற்றுகின்றனர் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-03 15:31 GMT
ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று கூறி, சின்னபிள்ளைகளுக்கு ஏமாற்றி உணவு ஊட்டுவது போல திமுகவினர் பொதுமக்களை ஏமாற்றுகின்றனர் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தாளமுத்துநகரில் அதிமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, தேர்தல் தோல்வி பயத்தினால் ஸ்டாலின் திண்ணை பிரசாரம் மேற்கொள்கிறார் என்று கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்