"முத்தரசன் எந்த தவறான கருத்தையும் பேசவில்லை" - வைகோ

"தடுத்து நிறுத்த ராமதாஸ் வழிவகை செய்ய வேண்டும்"

Update: 2019-05-01 07:24 GMT
பொன்பரப்பி சம்பவத்தை எதிர்த்து சென்னையில் நடந்த கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் எந்த தவறான கருத்தையும் பேசவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மே தின விழாவையொட்டி மதிமுக தலைமை அலுவலகத்தில் கொடியேற்றிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், முத்தரசனுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக தெரிவித்தார். இதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னெடுக்க வேண்டும் என்றும் வைகோ வேண்டுகோள் விடுத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்