ஸ்டாலினை பார்த்தால் பாவமாக தான் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

ஸ்டாலினை பார்த்தால் பாவமாக தான் உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-11 11:47 GMT
சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி ஓமலூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய முதலமைச்சர், திமுகவின் கூட்டணியிலே ஒற்றுமை இல்லாத‌போது, அந்த கூட்டணியால் எப்படி மத்தியில் நிலையான ஆட்சியை ஏற்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார். அதோடு, திமுக தலைவர் ஸ்டாலின் எப்போதும் தன்னை பற்றியே பேசி வருவதாக கூறிய முதலமைச்சர், அவரை பார்க்க பாவமாக இருப்பதாகவும் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்