நிலையான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கோவை கொடிசியா வளாகத்தில் அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

Update: 2019-04-10 03:46 GMT
கோவை கொடிசியா வளாகத்தில் அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும் கோதாவரி, காவிரி இணைக்கும் நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான நீர் உரிய நேரத்தில் கிடைப்பதுடன், லாபகரமான விவசாயம் சாத்தியமாகும் நிலை கனிந்து வருவதாகவும், அதனை உணர்ந்து வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்