13ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தை கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்கி வைக்கிறார் - திருநாவுக்கரசர்
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் எத்தனை தொழிற்சாலைகளை மத்திய அரசு அமைத்துள்ளது என்று திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகின்ற 13ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தை கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்கி வைக்க உள்ளதாக குறிப்பிட்டார். ஜி.எஸ்.டி திட்டம் பணமதிப்பு இழப்பு போன்றவற்றால் ஏழை மக்கள் கஷ்டப்படுவதாகவும், பணக்காரர்கள் தான் பலன் அடைந்ததாகவும் திருநாவுக்கரசர் விமர்சித்தார்.