மோடி என்ற மக்கள் கோஷத்தால் பலரின் தூக்கம் கலைந்துள்ளது - பிரதமர் மோடி

மோடி மோடி என்று மக்கள் எழுப்பும் கோஷத்தால் பலர் தூக்கத்தை இழந்து தவிப்பதாக பிரதமர் மோடி பேசினார்.

Update: 2019-03-09 11:24 GMT
உத்தரபிரதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி, நொய்டாவில் பண்டிட் தீனதயாள் உபத்யாயா பெயரில் தொல்லியல் கல்லூரியை தொடங்கி வைத்தார். பின்னர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், உத்தர பிரதேசத்தின் முந்தைய அரசில் சரியான ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் பல வளர்ச்சி திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்படாமல் முடங்கியதாகவும், பாஜக அரசு அமைந்த பின்னர் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.மேலும் 2014ஆம் ஆண்டு வரை நாட்டில் 2 செல்போன் தொழிற்சாலைகளே இருந்த நிலையில், தற்போது, 125 தொழிற்சாலைகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். முன்பு பல்வேறு நில முறைகேடுக்கு பெயர் பெற்ற நொய்டா தற்போது வாய்ப்புகளுக்கான நிலமாக மாறி உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.முன்னதாக அந்த கல்வி வளாகத்தில் பண்டிட் தீனதயாள் உபத்யாயா சிலையை அவர் திறந்து வைத்தார்
Tags:    

மேலும் செய்திகள்