திமுக சொல்பவர் தான் பிரதமராக வர முடியும் - ஸ்டாலின்

திமுக சொல்பவர் தான் பிரதமராக வர முடியும் - ஸ்டாலின்

Update: 2019-02-23 07:55 GMT
திமுக சொல்பவரே பிரதமராக வர முடியும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது என்றார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பின் விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றார். மேலும் கட்சி பாகுபாடு இல்லாமல் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்