"மம்தா பானர்ஜி அரசு நீண்ட நாள் நீடிக்காது" -உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லை என்று உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-06 02:35 GMT
புருலியாவில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் அராஜகம் மற்றும் ஜனநாயக விரோத அரசுக்கு எதிராக மக்களை திரட்ட வந்துள்ளதாக தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் அரசு ஜனநாயக விரோதமானது என்றும், மம்தா அரசு ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும் குற்றஞ்சாட்டினார். மம்தா பானர்ஜியின் சர்வாதிகார ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது என்றும், மோடியின் தலைமையிலான வழிகாட்டுதலில், விரைவில் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்