ஜாக்டோ- ஜியோ போராட்டம்: "தமிழக அரசு கையாண்ட விதம் தவறானது" - அன்புமணி

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை தமிழக அரசு கையாண்ட விதம் முற்றிலும் தவறானது என கூறினார்.

Update: 2019-01-29 18:49 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை தமிழக அரசு கையாண்ட விதம் முற்றிலும் தவறானது என கூறினார். அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மாணவர்கள் தேர்ச்சி தொடர்பாக ஆசிரியர்ளுக்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்