5 மாநில பேரவை தேர்தல் : நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

Update: 2018-12-10 13:09 GMT
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி,  நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 5 மாநிலங்களில் மொத்தமுள்ள 679 சட்டப் பேரவை தொகுதிகளில் ஒரு தொகுதி தவிர எஞ்சிய 678 தொகுதிகளுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய, முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்