"மேகதாது விவகாரம் - தமிழகத்தை வஞ்சிக்கும் செயல்" - முத்தரசன்

மேகதாதுவில் அணை கட்டும் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் என்று முத்தரசன் தெரிவித்தார்

Update: 2018-11-27 21:21 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க கோரியும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய கோரியும் சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேகதாதுவில் அணை கட்டும் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் என்று அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்