கேரள அரசு தன்னை திருத்தி கொள்ள வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்

சபரிமலையில் செயற்கையான பதற்றத்தை ஏற்படுத்தும் செயலில் இருந்து கேரளா அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-21 01:41 GMT
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரு முடி கட்டி சபரிமலை ஐயப்பனை தரிசிக்க சென்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்  சபரிமலையில் செயற்கையான பதற்றத்தை ஏற்படுத்தும் செயலில் இருந்து கேரளா அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். சபரிமலை கோயில் கேரள அரசின் நிர்வாகத்தில் உள்ள ஐயப்ப பக்தர்களின் ஆலயம், அதனை மனதில் வைத்து ஐயப்ப பக்தர்களை கேரள அரசு அணுக வேண்டும் என குறிப்பிட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்