"விஜய் பிரபாகரனின் பேச்சு இளைஞர்களை கவர்ந்து வருகிறது" - பிரேமலதா விஜயகாந்த்
"மற்ற கட்சியினரும் அவரது பேச்சை வரவேற்கின்றனர்" - பிரேமலதா விஜயகாந்த்
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் நடைபெற்ற தேமுதிகவின் 14-வது ஆண்டு துவக்க விழாவில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் பிரபாகரனின் கன்னிப் பேச்சு இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருவதாகவும், தேமுதிக மட்டுமின்றி அனைத்து கட்சியினரும் விஜய் பிரபாகரனின் பேச்சை வரவேற்கின்றனர் எனவும் தெரிவித்தார்.