"20 தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயார்" - எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க அதிமுக தயார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளர்.

Update: 2018-10-27 11:56 GMT
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தினகரனை சந்தித்த 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு அதிமுக  நோட்டீஸ் அனுப்பவில்லை என்று கூறினார். உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டோம் என சொல்லவில்லை என்று கூறிய முதலமைச்சர், நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெற்றது திமுக தான் என்றும் தெரிவித்தார். அதிமுக அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத தினகரன் குறித்து கேள்வி கேட்க வேண்டாம் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்