"இடைதேர்தலை சந்திக்க அதிமுக அரசிற்கு பயம் இல்லை" - தளவாய் சுந்தரம்

புஷ்கர விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் குறுக்குதுறை சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே தாமிரபரணியில் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் புனித நீராடினார்.

Update: 2018-10-16 03:14 GMT
புஷ்கர விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் குறுக்குதுறை சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே தாமிரபரணியில் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் புனித நீராடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புஷ்கர விழாவிற்கு தமிழக அரசு பொதுமக்களுக்கு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்தார். இடைதேர்தலை சந்திக்க அதிமுக அரசிற்கு பயம் இல்லை என்றும், தமிழக மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு எதிர்க்கும் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்