இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டத்தின் மூலம் மாமியார் மருமகள் சண்டையை போக்கியவர் ஜெயலலிதா - அமைச்சர் செல்லூர் ராஜூ

இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டத்தின் மூலம் மாமியார் மருமகள் சண்டையை போக்கியவர் ஜெயலலிதா என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-14 14:57 GMT
மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிருக்கான மானிய விலை இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், 286 பயனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். விழாவில் பேசிய, அமைச்சர் செல்லூர் ராஜூ, இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கியதன் மூலம் மாமியார் மருமகள் சண்டையை போக்கியவர் ஜெயலலிதா என்று குறிப்பிட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்