"சபாநாயகர் தனபாலை நீக்க வேண்டும்" : பேரவை செயலரிடம் கருணாஸ் வழக்கறிஞர் மனு

சபாநாயகர் தனபாலை நீக்கக் கோரி எம்.எல்.ஏ கருணாஸ் சார்பில் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-10-03 08:40 GMT
* கருணாஸ் சார்பில் அவரது வழக்கறிஞர் வழங்கியுள்ள அந்த மனுவில், தமிழக சட்டமன்ற விதி 68ன்படி தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளதாகவும், அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தனபால் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும், அதன் காரணமாக பல சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

* சட்டமன்ற மரபு மற்றும் அரசியல் சட்டத்தை மீறும் வகையில் சபாநாயகரின் செயல்பாடு உள்ளது எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சட்டப்பேரவையை கூட்டி தீர்மானம் கொண்டு வந்து சபாநாயகரை நீக்க வேண்டும் என அந்த மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்