"பெரியார் சிலையை அவமதித்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" - ஸ்டாலின்

பெரியார் சிலையை அவமதித்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-09-17 08:23 GMT
பெரியார் சிலையை அவமதித்தவர்களை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட இயக்கத்தால் தமிழகம் கண்டுள்ள சமுதாயப் புரட்சியை கண்டு பொறுக்க முடியாத சிலர், அண்மைக்காலமாக பெரியார் சிலை அவமதிப்பு போன்ற இழிவான செயல்களை மதவெறி சக்திகளின் பின்னணியுடன் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.

இதன் மூலமாக தமிழகத்தில் நிலவும் ஒற்றுமை உணர்வு, மதநல்லிணக்கம், சமூக நீதிக் கொள்கையை தகர்த்துவிடலாம் என திட்டமிடுபவர்களை ஒடுக்க வேண்டியது அவசியம் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். பெரியார் சிலையை அவமதித்தவர்களை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், இது போன்ற செயல்களைத் தூண்டும் அமைப்புகளை சட்டத்தின் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்